Posts

Showing posts from June, 2020

Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night

Image
வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு சுவாரஸ்யமான கதை  Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night  உங்களுக்காகக் காத்திருக்கிறது ! மழையில் மாட்டிக் கொண்ட பல்லவி : அடைமழை பொழிந்து கொண்டிருந்தது. இரவு 1௦ பத்து ஆகிவிட்டது. 'அடிக்கும் மழையில், இனி யார் உணவகத்திற்கு வரப்போகிறார்கள்? கடையைச் சாத்திவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள் , நான் பூட்டி கொள்கிறேன்' என்று வேலையாட்களிடம் கூறினாள் பல்லவி. வேலையாட்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு, 'சென்று வருகிறோம் அம்மா' என்றபடி வீட்டை நோக்கி நடந்தனர். பல்லவியும் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு கடையை மூடத் தயாராகினாள். கல்லாப் பெட்டியைத் திறந்து அன்று வசூலான ரூபாயை அடுக்கினாள் பல்லவி. மின்னல் வெளிச்சம் வானத்தைப் பிளந்தது, சட்டெனப் பல்லவி முன் ஒரு நிழல் தெரிந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தால் பல்லவி. ஜன்னல் பக்கம் யாரும் இல்லை. 'ஆனால், மின்னலின் வெளிச்சம் படும்பொழுது யாரோ இங்கு இருப்பது போல் தோன்றியதே?' என்றபடி மீண்டும் ரூபாயை எண்ண தொடங்கினாள். எனினும், பயம் அவள் மனதை ஆட்கொண்டது. 'ஏதாவது ஒரு வழிப்போக

Tamil blogs | செல்போன் அழைப்பு | interesting short story 'A phone call'

Image
நண்பர்களே! இன்று சற்று நகைச்சுவையான கதையோடு Tamil blogs | செல்போன் அழைப்பு | interesting short story 'A phone call' வந்துள்ளேன். படித்து மகிழுங்கள்! சிலர் ஒன்றாகக் கூடி கூடைப் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பல மணி நேர மகிழ்ச்சியான விளையாட்டிற்கு பின், வியர்த்து விறுவிறுத்து பசியோடு அங்கிருந்த உணவகத்தில் கூடினர். சட்டென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. மேஜை மீது இருந்த அந்தச் செல்போனின் பச்சை பொத்தானை அழுத்தினார் ஒருவர். உணவு உண்டு கொண்டிருந்ததால் அவர் கைப்பேசியின் லவுட் ஸ்பீக்கர் பொத்தனை அழுத்திப் பேசத்தொடங்கினார். மனைவி : ஹலோ! என்னங்க நான் என் தோழியோடு மால்-க்கு போறேன்னு நேற்று உங்களிடம் சொன்னேன்ல. அங்கு வந்து விட்டோம். எனக்குப் பிடித்தவற்றை வாங்கி கொள்ளவா? அவர் : சரி மா! வாங்கிக்கோ. மனைவி: என்னங்க, இங்கே ஒரு அழகிய ஆடை இருக்கு. பல நாட்களாக வாங்கித்தாங்கன்னு கேட்டேன்ல ஒரு மாடல், அது இங்கே இருக்கு. அதன் விலை 15,௦௦௦ ரூபாயாம்..... நிறம், அளவு எல்லாமே நான் எதிர்பார்த்தபடி இருக்கு வாங்கிக்கவா…? அவர் : வாங்கிக்கோ. [ஒரு ஆடைக்கு 15,௦௦௦ ரூபாயா என்று சுற்றி இருந்தவர்கள் திரு திருவென விழ

Tamil blogs | கோபத்தால் என்ன இலாபம் ? | Short interesting story of an angry man

Image
நண்பர்களே! மீண்டும் ஒரு சுவையான கதையோடு ' Tamil blogs | கோபத்தால் என்ன இலாபம் ? | Short interesting story of an angry man ' உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மனோவின் முயற்சி : மனோகரன் கடுமையான சினம் கொண்டவன். எவர் சொல்லுக்கும் செவிசாய்க்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வாதம் செய்பவன். ஆனால், இன்று ஆழ்ந்த மௌனமும் பொறுமையும் கொண்டிருந்தான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. பரபரப்பான சாலையில் ஏதோ ஒரு யோசனையோடு வேகமாக நடந்து கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு ஏக்கம் தெரிந்தது. நேராக ஒரு வீட்டின் வாசலில் நின்றான், 'குணா குணா' என்று வெளியே கத்தியபடி, உள்ளே வர அனுமதி எதிர்பார்த்து காத்திருந்தான். அந்த வீட்டின் கதவு திறந்தது. ஒரு அம்மா வெளியே வந்தார், 'நீங்கள் மனோகரன் தானே? உங்கள் நண்பர் குணாவின் மனைவி நான். அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்று உள்ளார்' என்றார். 'எப்பொழுது திரும்பி வருவார்?' என்று ஒருவித பதற்றத்தோடு கேட்டான் மனோகரன். 'அதை என்னிடம் சரியாகச் சொல்லவில்லை. அவர் வந்ததும் உங்களைக் க