Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night
வணக்கம் நண்பர்களே! இன்று ஒரு சுவாரஸ்யமான கதை Tamil blogs | அன்று இரவு | Story of a business girl caught at night உங்களுக்காகக் காத்திருக்கிறது ! மழையில் மாட்டிக் கொண்ட பல்லவி : அடைமழை பொழிந்து கொண்டிருந்தது. இரவு 1௦ பத்து ஆகிவிட்டது. 'அடிக்கும் மழையில், இனி யார் உணவகத்திற்கு வரப்போகிறார்கள்? கடையைச் சாத்திவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள் , நான் பூட்டி கொள்கிறேன்' என்று வேலையாட்களிடம் கூறினாள் பல்லவி. வேலையாட்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு, 'சென்று வருகிறோம் அம்மா' என்றபடி வீட்டை நோக்கி நடந்தனர். பல்லவியும் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு கடையை மூடத் தயாராகினாள். கல்லாப் பெட்டியைத் திறந்து அன்று வசூலான ரூபாயை அடுக்கினாள் பல்லவி. மின்னல் வெளிச்சம் வானத்தைப் பிளந்தது, சட்டெனப் பல்லவி முன் ஒரு நிழல் தெரிந்தது. யாரென்று திரும்பிப் பார்த்தால் பல்லவி. ஜன்னல் பக்கம் யாரும் இல்லை. 'ஆனால், மின்னலின் வெளிச்சம் படும்பொழுது யாரோ இங்கு இருப்பது போல் தோன்றியதே?' என்றபடி மீண்டும் ரூபாயை எண்ண தொடங்கினாள். எனினும், பயம் அவள் மனதை ஆட்கொண்டது. 'ஏதாவது ஒரு வழிப்போக