இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Tamil blogs |10 பண்டிதர்கள் | Funny Short Story of 10 Pundits on journey

படம்
ஒரு அழகிய காலை வேளை. ஊருக்கு வெளியே பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. சூரியன் தன் கதிர்களால் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார். சூரியனின் கதிர்கள் அந்த ஆற்றின் மீது பட, தங்கத்தை உருக்கி ஊற்றியது போல ஓடியது. அந்த ஆறு தவழ்ந்து செல்லும் வழியில் பச்சை பசேலெனச் செடி கொடிகள். மனிதனின் மனதை மயக்கி அமைதி தரும் அழகிய காட்சி. அந்த நேரம் அதன் வழியாகச் சென்றுக் கொண்டிருந்தது ஒரு கார். அதுவரை நிற்காமல் ஊரை நோக்கிப் பயணித்த கார் திடீரென நின்றது. அந்தக் காரிலிருந்து ஒருவர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து இன்னொருவர் இறங்கினார். அதோடு முடியவில்லை அந்தக் கார் பெருமூச்சி விடும் அளவிற்கு தொடர்ந்து ஆட்கள் அதிலிருந்து இறங்கினார்கள். ஒரு வழியாகக் கடைசியாக ஒருவர் காரின் கதவை மூடினார். அவர்கள் அனைவரும் பண்டிதர்கள். அந்த ஊரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு இறைவனை தரிசிக்க சென்றுக் கொண்டிருந்தனர். சரியாக மொத்தம் 10 பண்டிதர்கள். அந்தக் காட்சி அவர்களைக் காரை விட்டுக் கீழே இறங்க வைத்துள்ளது. நீராடும் ஆசை அனைவரும் அங்கு ஓடிக்கொண்டிருந்த நீரோடையை நோக்கிச் சென்றனர். தூய்மையான அ...

Tamil blogs | வெள்ளம் பஞ்சம் வேண்டாம்! | Short powerful story for life

படம்
ஒரு அழகிய ஊர் இருந்தது. அந்த ஊரில் உழவர்கள் பலர் வசித்து வந்தனர். மழை பொய்த்து போனாலும் வெயில் வாட்டி வதைத்தாலும் வெள்ளம் புகுந்தாலும் வருடம் தவறாமல் கடவுளுக்குப் படையல் வைப்பார்கள். அந்த வருடமும் படையலுக்கான ஏற்பாடுங்கள் விமர்சையாக நடந்தது.  அவர்களின் பக்தியைக் கண்டு மனம் இறங்கிய இறைவன், அந்த ஊர் மக்களின் முன் தோன்றினார். ‘மக்களே, உங்கள் அன்பை கண்டு நான் ஆனந்தம் அடைந்தேன். இனி நீங்கள் என்னை எப்பொழுது அழைத்தாலும் உங்கள் முன்பு தோன்றுவேன். நீங்கள் ஒன்றாகக் கூடி கேட்கும் வரத்தை அளிப்பேன்’ என்றுக் கூறி மறைந்தார். மக்கள் அனைவரும் மகிழிச்சியில் திளைத்தனர். அடுத்த அறுவடைக்காகத் தயாராகினர். நிலத்தை உழுது விதைகளைத் தூவி பயிர் வளரக் காத்திருந்தனர். சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பலத்த மழை. வெள்ளம் வரும் அளவிற்கு வானம் மழையை பொழிந்தது. அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடினர், கடவுளை அழைத்தனர். இறைவனும் தான் கூறியப் படியே அவர்கள் முன் தோன்றினார், ‘உங்கள் கோரிக்கை என்ன?’ எனக் கேட்டார். மக்கள் ‘இறைவா! எங்கள் ஊரையும் பயிர்களையும் என்றுமே வெள்ளம் அடிக்காமல் காத்து அருளுங்...

Tamil blogs | அவள் எப்படி தப்பித்தாள்? | Short story of wise girl

படம்
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வந்தார். அந்த வருடம் இயற்கை மாற்றத்தினால் பருவ மழை பொய்த்துப் போனது. அந்த வருடம் விளைச்சல் சரியாகக் கிடைக்காமல் அவர் குடும்பம் பட்டினியில் தவித்தது. விவசாயிகளின் இது போன்ற நிலைமையைப் பயன்படுத்தி தங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொள்ள நினைக்கும் கழுகு கூட்டமும் அந்த ஊரில் உள்ளது. உண்ண உணவின்றி தவித்த தன் குடும்பத்தைக் கண்டு வருந்திய அந்த விவசாயி, வேறு வழியின்றி அந்தக் கழுகு கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பணத் தவளையிடம் சிக்கிக் கொண்டார். அதிக வட்டி என்று தெரிந்தாலும் இறைவன் மீது பாரத்தை போட்டுத் தன் நிலத்தை வைத்துக் கடன் வாங்கி விட்டார். வாங்கிய பணத்தை மிகவும் கவனமாகச் செலவழித்தார். வருவாய் ஈட்ட வேறு வழிகளைத் தீவிரமாகத் தேடினார். அவரது விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. சந்தையில் காலை முழுவதும் கூலி வேலை, மததியம் பிற கடைகளில் வேலை செய்வது என அயராது உழைத்து, வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தி விட்டார். வீட்டின் நிலைமையும் பஞ்சத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் கடன் கொடுத்...

Tamil blogs | நீ எதை தேர்ந்தெடுக்கப் போகிறாய்? | Short Tamil moral story

படம்
ஒரு ஊரில் சமையல்காரர் ஒருவர் வசித்து வந்தார் பெயர், ராமு. அவர் சமையல் எந்த அளவுக்குச் சுவையானதோ அந்த அளவிற்கு இனிமையானவர். அந்த ஊரில் அவரை அனைவருக்கும் பிடிக்கும் அத்தகைய பண்பாளன். ராமு சிறு வயது முதலே பல கஷ்டங்களை எதிர்கொண்டான். சிறு வயதிலே தன் பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்துவிட்டான். நன்றாகப் படிக்கும் மாணவன் எனினும் அன்றாட தேவைக்குக் கூடப் பணம் இல்லாததால், பள்ளி படிப்பைப் பாதியிலே கைவிட்டான். தனக்கு தெரிந்த சமையலை தொழிலாக மாற்றிக் கொண்டான். தற்போது 50 வருடங்களாகக் கோவில்  மற்றும் வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்து பரிமாறி வருகிறான்.   அவருக்கு ஒரு பெண் குழந்தை, அமுதா வயது 20 . தனக்கு பண கஷ்டம் அவ்வப்போது இருந்தாலும், அதை என்றும் தன் மகளிடம் காட்டிக் கொண்டதில்லை. எந்தக் காரணத்தால் அவன் கல்வி தடை பட்டதோ அதே போன்ற பாதிப்பு தன் மகளுக்கு வரக் கூடாது என ஊரிலே சிறந்த பள்ளியில் படிக்க வைத்தான். அமுதாவின் புலம்பல் அமுதா மிகவும் நன்றாகப் படிப்பாள், வகுப்பில் என்றுமே முதல் மதிபெண் பெற்று தேர்ச்சி அடைவாள். அப்பாமீது அதிக அன்பு கொண்டவள் ஆனால் அவரைவிட அதிகம் படித்தவள் எனக...

Tamil blogs | ஏமாற்றினால் ஏமாறுவாய்! | funny short moral story

படம்
ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் இருந்தனர். நால்வரும் நெருங்கிய நண்பர்கள், எது செய்தாலும் ஒன்றாகத் தான் செய்வார்கள். கல்லூரியில் வேலை செய்யும் கணக்குப் பேராசிரியர் மூர்த்தி, வழக்கம்போலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடியும் சமயத்தில், ‘பிள்ளைகளே! நாளை ஐந்தாவது பாடத்தில் இருக்கும் 1 6 மதிப்பெண் வினா-விடைகளை படித்து வாருங்கள் ஒரு தேர்வு வைக்கப் போகிறேன்’ எனக் கூறி விட்டுச் சென்றார் மூர்த்தி. நான்கு நண்பர்களும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர், ‘என்னடா இது? இன்று இரவு நாம் புதிய 'வீடியோ கேம்' விளையாடுவதாக இருந்தோமே, அவர் நாளைத் தேர்வு வைக்கப் போவதாகச் சொல்கிறாரே’ என்றான் ஒருவன். ‘விடுடா பார்த்துக் கொள்வோம். நாம் திட்டமிட்ட படியே இன்று இரவு விளையாடத் தான் போகிறோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னடா சொல்றீங்க?’ என மற்றவர்களைக் கேட்டான் இன்னொருவன். ‘ஆமாம் -டா விளையாடுவோம்’ என மற்ற இருவரும் தலையாட்டினர். அவர்கள் பேசி வைத்த படியே இரவு விளையாடினர். பின் அனைவரும் வீடு நோக்கி நகர்ந்தனர். காலை விடிந்தது, கல்லூரிக்கு எப்பொழுதும் போல ஒன்றாகப் புறப்பட்டனர். ‘தேர்வு...