Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு
வணக்கம் நண்பர்களே! மனதை உருக வைக்கும் ‘Tamil blogs | இரண்டு நண்பர்களின் கதை | நட்பு ’ கதையைப் படிக்கத் தயாராகுங்கள்! இரு நண்பர்கள் 'ராம் ரவி' என இரு நண்பர்கள். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். 20 வருடங்களாகப் பக்கத்து பக்கத்து வீடு. பள்ளி முதல் கல்லூரிவரை ஒன்றாகப் படித்து வந்தனர். ரவிக்கு யாரும் இல்லை. அவன் சிறு வயதில் ஒரு விபத்தில் அவன் குடும்பத்தினர் இறைவன் அடி சேர்ந்தனர், ரவி மட்டும் தப்பித்தான். ராமின் குடும்பத்தைத் தன் குடும்பமாக நினைத்து வாழ்ந்து வந்தான். கடைசி வரை உடன் இருப்பதாக இருவரும் தங்களுக்குள்ளே சத்தியம் செய்துக் கொண்டனர். எந்த நேரமும் ஒன்றாகச் சுற்றுவார்கள் எல்லா செயல்களையும் ஒருவருக்கொருவர் உதவிச் செய்து முடிப்பர். ஒருவருக்கு பிரச்சனை வந்தால் அதைத் தன் பிரச்சனைபோல முன் நின்று எதிர்கொள்வார் மற்றொருவர். புதிய நண்பன் ஆகாஷ் இவர்களின் நட்பைக் கண்டு வியந்து போகாதோர் அந்த ஊரில் இல்லை. இருவருமே தங்களின் நட்பைக் கண்டு பெருமிதம் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் தான் அவர்களின் வீட்டிற்கு அருகே குடி வந்தான் ஆகாஷ். இவர்களின