Tamil blogs | திருடியது யார்? | Short interesting investigation story of 'Who Stole'?
இரவு நேரம் 2 போலீஸ் அதிகாரிகள்; அர்ஜுன் மற்றும் அவரின் உதவியாளர் பிரவீன். அந்த ஊரின் அருங்காட்சியகம் நோக்கிச் சென்றனர். அந்த இடத்தைச் சென்று அடைந்ததும் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ‘வணக்கம் சார்’ என அங்கு ஏற்கனவே கூடி இருந்த சில காவலர்கள் இருவரையும் வரவேற்றனர். இந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அர்ஜுன் உத்தரவிட்டார். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இரண்டு பழங்காலத்து சிற்பங்கள் மற்றும் சில வைரங்களைக் கொள்ளையர்கள் திருடி விட்டனர். இதைக் கவனித்து போலீசுக்கு அங்கிருந்த அருங்காட்சியகத்து காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய நபர்கள் நடந்தவற்றை போலீஸ் கேமராவில் அங்கிருந்த காவலாளியின் உதவியுடன் பார்த்தனர். அங்கிருந்த நுழைவு வாயில் கேமராவுக்கு நேராக வந்த ஒரு முகமூடி அணிந்த திருடன், அந்தக் கேமராவை உடைத்தான். பின்பு நேராகக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, அந்தத் திருடன் அருங்காட்சியகத்தின் அனைத்து கேமராக்களையும் நிறுத்துவது போன்ற காட்சிகளைப் பார்த்தனர். அவர்கள் சந்தேகப்படு