Tamil blogs | குணமா? பணமா? பகுதி -2 | Story of adamant rich woman part 2
வணக்கம் நண்பர்களே! சென்ற கதையில், [Part 1 : Tamil blogs | குணமா? பணமா? | Story of adamant rich woman ] வரிசையில் நிற்கமால் ஆய்வாளரிடம் சண்டை போட்டு ஆணவத்தோடு விமானம் ஏறிய அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்த்தோம். விமானத்தில் தன் அருகில் உள்ள ஏழை பெரியவரை வேறு இடத்திற்கு மாற்றினால் தான் விமானம் புறப் பட அனுமதிப்பேன் என்று பிரச்சனை செய்தாள். இனி நடப்பவையை காண்போம்! பணிப் பெண்ணின் பணிவு : 'மேடம், சிரமத்திற்கு வருந்துகிறோம். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது' என்றாள் பணிப்பெண். 'பொறுத்துக் கொள்ள வேண்டுமா? நானா? என்னைப் பொறுத்துக் கொள்ளும் படி வலியுறுத்த நீ யார்? என்றாள் ராணி. பணிப்பெண், 'சரி உங்களுக்கு என்ன தான் வேண்டும் ? என்ன செய்தால் விமானம் புறப்பட அனுமதிப்பீர்கள்?' என உபாயம் கேட்டாள். உடனே, 'இந்த முதியவரை வேறிடத்திற்கு மாற்றங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியாகப் பயணம் மேற்கொள்ள இயலும்' எனக் கர்வத்தோடு கூறினாள் ராணி. இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்த அந்தப் பெரியவர், மிகுந்த மனவேதனை அடைந்தார்.